மதுரையில் வைகையாற்றில் தனியார் அறக்கட்டளையினர் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட நிலையில் பொதுப்பணித்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வைகையாற்றை தூய்மைப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என தமிழக ஆளுநர் அர்லேகர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், வைகை ஆறு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அறக்கட்டளையினர், அதற்கான முயற்சியில் இறங்கினர். கல்பாலம் அருகே வைகையாற்று பகுதியில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகளை 4 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் லாரிகள் மூலம் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அங்கு வந்த பொதுப்பணித்துறையினர், இந்த பணிகளுக்கு அனுமதியில்லை எனக்கூறி தடுத்து நிறுத்தியதுடன், வாகனங்களை வெளியேற்றியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
















