தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாளுக்கு தமிழக காவல்துறையினர் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேச முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘ஐடிபிஎஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் இருந்தபடியே சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை லட்சுமண பெருமாள் அழித்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து, அவருக்கு தமிழக காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
















