பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளுக்குள் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்பினருக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே பள்ளி வளாகங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















