தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பணப்பரிமாற்றத்தின் மூலம் சிக்கிய மேலும் 2 பேர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய 9 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இதில் நரேஷ், கார்த்திக், ரமேஷ், திருநாவுக்கரசு, தியாகராஜன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேதுராஜன் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதும், ஏற்கனவே கைதாகி உள்ள கார்த்திக்கும் சேதுராஜனும் நண்பர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கார்த்திக், சேதுராஜனிடையே பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர் ராஜசேகரிடம் 56 லட்சம் ரூபாயும், சேதுராஜனிடம் 14 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
















