தமிழக அறநிலையத்துறை கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் தேக்கநிலையைத் தவிர்க்க, 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்குள் நித்தியபடி பூஜைகளுக்கான பூ, மாலை, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களுக்கு டெண்டர் விடப்படுவது வழக்கம். நடப்பு பசலி 1436-க்கான டெண்டர்கள், முந்தைய ஆட்சிக் கால முறைகேடுகளைக்களையும் நோக்கில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசால் ரத்து செய்யப்பட்டன.
தொடர்ந்து, ‘இட்காட்’ (ITCOT) நிறுவனத்தின் நிபந்தனைகளின்படி, அனைத்துப் பணிகளையும் ‘இ-டெண்டர்’ (E-Tender) முறையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது.
இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டு, ஐந்து லட்சம் ரூபாய் வரை வழக்கமான டெண்டராகவும், அதற்கு மேல் உள்ளவற்றை இ-டெண்டராகவும் நடத்த உத்தரவிட வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சருக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
















