வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு – காசி இடையிலான ஆன்மிகம் மற்றும் கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்தாண்டு டிசம்பரில் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்கள், நடுவர் குழு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, எழுத்தாளர் சுதா சேஷய்யன், நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வுக்காக அனைவரும் காத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
















