திருத்தணி முருகன் கோயிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தடுப்புச் சுவர், மழையால் திடீரென சரிந்து விழுந்தது. பக்தர்கள் யாரும் அந்தப் பகுதியில் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த மாதம் ஆய்வு செய்த அறநிலையத்துறை ஆணையர் வினய், அப்பகுதியை உடனடியாக உறுதிப்படுத்த உத்தரவிட்டும், இணை ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதை காற்றில் பறக்கவிட்டதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அடுத்த மாதம் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கால் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
















