தலைமை செயலகத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் 103 கோடி ரூபாய் மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு 2002-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்ட நிலையில், தற்போது வேலூர், பெங்களூரு, தருமபுரி மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் விரைவில் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில், வணிக வளாகத்திற்கு மாற்றாக, புதிய தலைமைச் செயலகம் கட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி அதிகரித்து வருவதால் கோயம்பேட்டில் தலைமைச் செயலகம் கட்டலாம் என்று சில அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஒப்புதல் அளித்தால், இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.
















