வியட்நாமில் இந்தியர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.‘
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகமும், துணைத் தூதரகமும் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















