வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா – நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இதனை பிரதமர் ஏற்றுக்கொண்டார்
தொடர்ந்து ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பழங்குடியினரின் ஹாகா நடனத்தை பிரதமர் கண்டுரசித்தார்.
தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, சுற்றுலா உட்பட 5 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா-நியூசிலாந்து இடையே 57 சதவீத பொருட்கள் மீதான வரி நீக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, வர்த்தக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா – நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் பங்கேற்ற நிலையில், இந்திய மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளின் ஜெர்சிகளை குறிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு டி-சர்ட் பரிசளிக்கப்பட்டது. மோடி, லக்சன் என இடம்பெற்ற கிரிக்கெட் ஜெர்சிகள் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டன.
ஆக்லாந்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் பங்கேற்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
















