பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.ஜானகி பாடியுள்ளார்.
தமிழில் இரண்டு, தெலங்கு மற்றும் மலையாளம் என, நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மருத்துவமனையில் எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் காலமானதாக, அவரது பேத்தி தகவல் தெரிவித்தார்.
மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் இன்று பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கனியனகுந்தியில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
















