வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள், மும்பை வழியாக இன்று சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கர் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினய்குமார் ஆகியோரின் உடல்கள் சென்னை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமான மூலம் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு உறவினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் இருவரின் உடல்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து அரசு ஏற்பாடு செய்த சிறப்பு வாகனங்களில் இருவரின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உடலை விரைவாக தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ வினோத் கண்ணன் உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக வினய்குமாரின் மாமனார் பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.
















