ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான், சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதலை தொடங்கின. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ஈரான் – அமெரிக்கா இடையே ஜூன் 17-ம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டிய பகுதியில் சென்ற மூன்று வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான், சைப்ரஸ் நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்க ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
















