ரேஷன் பொருள் கடத்தல் மற்றும் தரமற்ற பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், தனித்தனியே வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்படும் என உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்,
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் காலங்களில் தரமான அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
ரேஷன் பொருட்கள், அரிசி குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என்றும், “ரேஷன் பொருட்கள் கடத்தல், தரமற்ற ரேஷன் பொருட்கள் குறித்து புகாரளிக்க தனித்தனியே வாட்ஸ் அப் எண்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு மாதமும் 2-ஆவது சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் உணவு வழங்கல் துறை சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் வெங்கட்ராமன் குறிப்பிட்டார்.
















