‘கர்மவீரர்’ காமராஜரின் பிறந்தநாளில், கல்வியை அனைவரிடமும் கொண்டு சேர்த்த அவரது தொலைநோக்குப் பார்வையையும், எளிமை, நேர்மை மற்றும் பொதுநலம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் அடையாளங்களாகக் கொண்டிருந்த அவரது உயரிய பண்புகளையும் நன்றியுடன் நினைவுகூர்வோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அவரது சேவையுணர்வும் சுயநலமற்ற தலைமைத்துவமும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாக என்றென்றும் திகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“கல்விக்கண் திறந்த தலைவர்” என்று போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளில், சமத்துவம் மற்றும் வளர்ச்சியால் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்க, அவரது உயரிய கொள்கைகளையும் மக்கள் நலனுக்காக அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு உணர்வையும் பின்பற்றுவோம் என உறுதி ஏற்போம் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















