பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில நிர்வாகி செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம், தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பிறகும், கடந்த 3-ம் தேதி தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கோயில் கைங்கரியத்திற்காக வழங்கப்பட்ட நிலம் எந்தச் சூழலிலும் தனிநபர்களுக்குச் செல்லக் கூடாது என்றும், இந்த சட்டவிரோத பத்திரப்பதிவை அரசு உடனடியாக ரத்து செய்து, இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
















