பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2.19 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செமிகான் 2.0, மொபைல் போன் உற்பத்தி திட்டம், உரம் தொடர்பான தேசிய முதலீட்டு கொள்கை, உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு 2.19 லட்சம் கோடி ரூபாய் ஆகும். மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செமிகண்டக்டர் 2.0 திட்டத்திற்கு ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி திட்டத்திற்கு 62 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
















