நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் ஆஜரான திமுக முன்னாள் அமைசசர் எ.வ.வேலுவிடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கரூரில் நெடுஞ்சாலைப் பணிகளில் 3 கோடியே 23 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, எ.வ.வேலு, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். காலை 10.50 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த எ.வ.வேலுவிடம், சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரத் தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்தார். தான் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும், அரசு திட்டமிட்டு தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாகவும் எ.வ.வேலு தெரிவித்தார்.
















