பேட்மின்டன் விளையாட்டை மேம்படுத்த சென்னையில் தனி அகடாமி அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் பேட்மின்டன் தொடரை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்திய பேட்மின்டன் சங்க துணைத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தனர். முன்னதாக இருவரும் பேட்மின்டன் விளையாடினர்.
பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், பேட்மின்டன் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் தனி அகடாமி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான விடுதிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர் விடுதிகளில் ஏசி வசதி ஏற்படுத்த முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட வலுவான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் கூறினார்.
















