கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 73 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் , சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, ஒன்னல்வாடி, கோகுல் நகர், நல்லூர் அக்ரஹார பகுதியில் தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 23 பெண்கள் உட்பட 73 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, அவர்களை சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள வங்கதேச முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
















