ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என, முதலமைச்சர் ஜோசப் விஜய் எச்சரித்துள்ளார்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்; தவறு நடந்தது தெரிந்தால் உடனே பதவி பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் எச்சரித்துள்ளார்.
தவெக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டதாக, லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும்,
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
















