பழனி கோவில் நில பதிவு விவகாரம் - சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
Jul 17, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 17, 2026, 07:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலக டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் போலீசார், பழனி அடிவாரம் கிரி வீதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அங்குள்ள நிலங்கள் பிரிவு மற்றும் முக்கிய ஆவணக் காப்பகங்களிலும் விசாரணை நடைபெற்றது. ​

நில விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்ட ஆட்சேபனை கடிதங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அசல் பிரதிகள் மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத பத்திரப்பதிவு விவரங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும், திருக்கோயில் நிலங்கள் பிரிவில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிமும் வாக்குமூலம் பெற்றனர்.

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில் புதிய எஃப்.ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பழனி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இவை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டநிலையில், சிபிசிஐடி போலீசார், புதிய முதல் தகவல் அறிக்கையை முறைப்படி பதிவு செய்து, வழக்கை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அலுவலக சோதனையை தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலுக்குப் பின்புறம் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்திற்கு போலீசார் நேரடியாகச் சென்று அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தின் எல்லைப் பகுதிகளை கள ஆய்வு செய்தனர்.

பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 6-ஆம் தேதி, தற்காலிகப் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மேற்கொண்ட அந்தச் சட்டவிரோதப் பதிவு விவரங்களின் அசல் கணினிப் பதிவுகள் மற்றும் ஆவணக் காப்பகக் கோப்புகளை சிபிசிஐடி அதிகாரிகள் சரிபார்த்து, தங்களது கோப்புகளில் பதிவு செய்தனர்.

மேலும், பணியில் இணைந்துள்ள சார்பதிவாளர் மற்றும் அங்குள்ள அலுவலகப் பணியாளர்களிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: palani templeCB-CID policeCB-CID police investigationpalani temple land issue
ShareTweetSendShare
Previous Post

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

Next Post

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Related News

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

நாகர்கோவில் சபரி வர்மன் உயிரிழந்த விவகாரம் – தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்!

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

ஹைட்ரஜன் ரயில்கள் கொண்ட ஒருசில நாடுகளில் இந்தியாவும் இணைகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

நீட் தேர்வு முடிவு வெளியானது – 11,21,000 மாணவர்கள் தேர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி கோவில் நில பதிவு விவகாரம் – சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர் நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு – சதித்திட்டம் முறியடிப்பு? : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies