ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பதிவுத்துறை டிஐஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பதவி உயர்வு பட்டியலில் பெயர் உள்ளதால் மட்டுமே, அதனை உரிமையாகக் கோர முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
துறை ரீதியான விசாரணை எதிர்கொள்ளும் பதிவுத்துறை டி.ஐ.ஜி ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய டி.ஐ.ஜி-க்கு பதவி உயர்வு தர மறுத்த தமிழக அரசின் முடிவு சரி என்றும், மேலும், கறைபடியாத நேர்மையான அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
















