நாகர்கோவில் விசாரணை கைதி சபரி வர்மன் உயிரிழந்த விவகாரத்தில் தென்தாமரைக்குளம் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன், தனது பெட்டிக்கடையில் குட்கா புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட சபரிவர்மன் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பூதாகரமான நிலையில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சிறை வார்டன்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சிறை வார்டன்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் சபரிவர்மனை கைது செய்த தென் தாமரைக்குளம் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
















