கரூரில் ஒட்டப்பட்ட நன்றி தெரிவிக்கும் போஸ்டர், புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 84 ஏக்கர் இனாம் நிலங்கள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவை வரவேற்று, காங்கிரஸ் நிர்வாகி பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதில், முதலமைச்சர் விஜய்க்கும், கரூர் எம்.பி. ஜோதிமணிக்கும் புகழாரம் சூட்டும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்த போஸ்டர் கரூர் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
















