“மேகாலயா பிராஜக்ட்” என்ற பெயரில் சுமார் 15 தவெக எம்எல்ஏக்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குதிரை பேர விவகாரம் தொடர்பாக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
இதுகுறித்த புலன் விசாரணையில், திருநாவுக்கரசு மற்றும் மேலும் சிலர் கூட்டுச் சதி செய்து, “மேகாலயா பிராஜக்ட்” என்ற பெயரில் சுமார் 15 தவெக எம்எல்ஏக்களுக்கு பெருந்தொகை பணம் வழங்கி, அவர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், தனியார் தொலைக்காட்சி ஊழியர் விஜயன் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு ஆட்சேபகரமான வகையில் குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், குற்றச்சதி நடைபெற்ற காலகட்டத்தில் அவருடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விஜயனுக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பான ஆதாரங்களை கண்டறியும் நோக்கில், அவரது செல்போன் சைபர் தடயவியல் பகுப்பாய்விற்காக பெறப்பட்டு, தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















