நாட்டின் முதல் மற்றும் உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரியானா மாநிலம் ஜிந்த் நகர் ரயில் நிலையத்தில் இருந்து சோனிபட் வரை இயக்கப்படும் இந்த ரயில், 10 பெட்டிகளுடன் வடிவமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 800 பேர் வரை பயணிக்கும் வசதியை கொண்டுள்ளது.
டீசல் ரயில்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் ரயிலில் இருந்து நீர் மற்றும் நீராவி மட்டுமே வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த ரயிலின் பயணக் கட்டணம், 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
















