திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















