இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்க சலுகையோ சலுகை - பாகிஸ்தானை கடுப்பேற்றும் ஆஃப்கனிஸ்தான்!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்க சலுகையோ சலுகை – பாகிஸ்தானை கடுப்பேற்றும் ஆஃப்கனிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலவச நிலம், இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான ஒரு சதவீத இறக்குமதி வரி மற்றும் 5 ஆண்டுகளுக்கான வரிவிலக்கு என ஏராளமான சலுகைகளை வழங்கி இந்திய தொழிலதிபர்களை ஆப்கானில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2021 ஆம் ஆண்டு ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்கு முன்பே அந்நாட்டில், புதிய நாடாளுமன்றம், மின்னுற்பத்தி நிலையங்கள், சாலைகள், மருத்துவமனைகள் அணைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் சுமார் 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் இந்தியா முதலீடு செய்திருந்தது. இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கான் அரசு கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, முத்தாகியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசினார். இந்தியாவின் அழைப்பை ஏற்று, முத்தாகி முதல் முறையாக இந்தியாவுக்கு வந்தார். பிறகு ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தொழில்நுட்ப மையம், இந்திய தூதரகமாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த மாதம் பாகிஸ்தான் ஆப்கான் எல்லை மோதல்கள் தீவிரமானதையடுத்து கத்தாரில் நடந்த இருநாடுகளுக்குமான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாகிஸ்தானிடம் இருந்து மருந்துபொருட்கள் உள்ளிட்ட பிற பொருட்களை இறக்குமதி செய்ய ஆப்கான் அரசுத் தடை விதித்தது.

தீவிரவாதிகளுக்கு ஆப்கனிஸ்தான் அரசு ஆதரவளித்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பாகிஸ்தான், எல்லையை மூடியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கை ஆப்கான் வர்த்தகர்களை மட்டுமல்ல, சந்தைகளையும் சீர்குலைத்து சாதாரண மக்களையும் பாதித்துள்ளதாக ஆப்கான் துணைப் பிரதமர் முல்லா பரதர் தெரிவித்திருந்தார்.

மேலும், பாகிஸ்தானில் இருந்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, மாற்று வர்த்தக இடங்கள் மற்றும் போக்குவரத்து வழிகளைத் தேடுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் ஹாஜி நூருதீன் அசிசி, ஆப்கானிஸ்தானில் இந்திய தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வர்த்தகம், இணைப்பு மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள்குறித்து அசிசி விவாதித்தாகவும் ஆப்கானிஸ்தான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான இந்தியாவின் ஆதரவை கேட்டுக் கொண்டதாகவும் மத்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் இருநாடுகளுக்கும் இடையேயான ஒரு பில்லியன் டாலர் வர்த்தகத்துக்கான ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆப்கானில் உருவாக்கப்படும் தயாரிப்புகளுக்கான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒரு சதவீத முன்னுரிமை வரியும், முதல் 5 ஆண்டுகளுக்கான முழுமையான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்துறைகளில் இந்திய முதலீடுகளுக்கான ஊக்கமும் சலுகைகளும் உள்ளடக்கிய பரந்த பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அமைதியான வணிக நட்புச் சூழலை ஆப்கான் அரசு உருவாக்கித் தரும் என்றும் ஆப்கானிஸ்தான் தொழில் துறை அமைச்சர் அசிசி உறுதியளித்துள்ளார்.

கூட்டு வர்த்தக சபையை நிறுவவும், தூதரகங்களுக்கிடையே வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தவும் வர்த்தகம் மற்றும் முதலீடுகுறித்த கூட்டுப் பணிக்குழுவை புதுப்பிக்கவும் இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. காபூல்-டெல்லி, காபூல்-அமிர்தசரஸ் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விமான சரக்கு வழித்தடம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சரக்கு விமானங்கள் மிக விரைவில் செயல்படத் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா, திராட்சை, குங்குமப்பூ, மாதுளை, கம்பளங்கள் மற்றும் சில மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல் இந்தியாவில் இருந்து அரிசி, மசாலாப் பொருட்கள், காய்கறிகள், தேநீர் டீ, காஃபி, பருத்தி, மருந்துகள் மற்றும் இதர வர்த்தகப் பொருட்களும் அதிகளவில் ஆப்கானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

லித்தியம், தாமிரம் மற்றும் அரிய மண் உள்ளிட்ட 3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பயன்படுத்தப்படாத அரியவகை கனிமங்களை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ள நிலையில் தூய்மையான எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப லட்சியங்களுக்கு இந்தியா அதைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் முதலீடு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்காகப் பாகிஸ்தானை சார்ந்திருப்பதைக் குறைக்க ஆப்கானிஸ்தானும் உறுதியாக உள்ளது.

Tags: pakistan newsOffer or offer to attract Indian investors - Afghanistan is making Pakistan sufferஆஃப்கனிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!

Next Post

சென்னை யானை கவுனி நகைப்பட்டறை கொள்ளை வழக்கு – ராஜஸ்தானில் 3 பேர் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies