கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பச்சிளம் குழந்தை, உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணப்பட்டியில் இருந்து வெள்ளானப்பட்டி செல்லும் சாலையில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் அருகே பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தை உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளது.
இதைக்கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















