அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் - வேதனையில் உள்ளூர்!
Jan 13, 2026, 11:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் – வேதனையில் உள்ளூர்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுற்றுலாப்பயணிகள் விரும்பி வரும் சுற்றுலாத் தளமாகத் திகழ்ந்த கொடைக்கானல் தற்போது போதைக் காளான்களை விரும்புவோருக்கான சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களில் விளையும் போதை காளான்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் விரும்பி வரும் சுற்றுத்தளமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தளமாக விளங்கும் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கொடைக்கானல் பகுதியின் மேல்மலை கிராமங்களில் உள்ள புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் விளையும் மேஜிக் மஸ்ரூம் என அழைக்கப்படும் போதைக் காளான்கள் எதிர்கால இளைய சமுதாயத்தைச் சீரழித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. கொடைக்கானலில் மட்டுமே கிடைக்கும் இவ்வகை போதை காளான்களை வாங்குவதற்காகவே கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் அதிகளவில் வருவதும் தெரியவந்துள்ளது.

உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போதைக் காளான்களை விரும்பி உண்ணுவதை வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், குண்டுபட்டி, கிளாவரை ஆகிய கிராமங்களில் விளையும் போதை காளான்களோடு, கொடியவகை போதைப் பொருட்களும் தாராளமாகப் புழங்கி வரும் நிலையில் அது தொடர்பாகப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில் போதை காளான்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி, மூளையை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் அபாயத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கி வந்த கொடைக்கானல் தற்போது போதைப் பொருட்களுக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக மாறி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத் தளத்தின் நற்பெயரோடு இளைஞர்களின் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் போதை காளான்கள் உற்பத்தியை அடியோடு ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Tags: Increasing circulation of intoxicating mushrooms: Youths targeting Kodaikanal - Locals in agonyஅதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம்
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் “விக்ரம்-1” : விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைத்த இந்தியா…!

Next Post

பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு – கடும் சீற்றத்தில் மக்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies