கோவாவில் நிறுவப்பட்டுள்ள 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தெற்கு கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் 77 அடியில் ஸ்ரீ ராமரின் வெண்கல சிலை நிறுவப்பட்டு இன்று புனித பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நொய்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராம் சுதாரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ராமர் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
மடத்தின் 550வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஸ்ரீராமரின் சிலை மற்றும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் திறந்து வைத்தார்.
















