டிட்வா புயலின் எதிரொலியாகக் கடலூர் மாவட்டத்தில் கடை வீதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் இடைவிடாது கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும், மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனால் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதே போலக் காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
















