கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6ம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
அந்த வகையில் 6ம் நாள் உற்சவம் மேளதாளத்துடன் நடைபெற்றது. தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி , தெய்வானை தாயாருடன் வீதியுலா வந்தார்.
இவர்களை தொடர்ந்து சத்தியகீரீஸ்வரர், பிரியாவிடை அம்மன், கோவர்த்தன அம்பிகை ஆகிய தெய்வங்கள் தனி தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















