திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழ்நாட்டின் சிவகங்கையில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் யாவும் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
















