நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்கும் மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, இதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்க ஏதுவாகக் கலால் வரி விதிக்கும் வகையில் 2 மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வரியானது சிகரெட், மெல்லும் புகையிலை பொருட்கள், ஹூக்காக்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் என்றும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 40 சதவீத ஜிஎஸ்டி மற்றும் உற்பத்தி வரி ஆகியவை விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
















