திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிச்சாண்டவர் தங்கமேரு வாகனத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் இரவு உற்சவத்தில் சிறப்பு அலங்கார கோலத்தில் இருந்த பிச்சாண்டவர், தங்கமேரு வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட, பக்தர்கள் ஆனந்தமாகக் கண்டுரசித்தனர்.
















