இனி உங்கள் ஃபோனில் Sanchar Saathi APP கட்டாயம் - மத்திய அரசு அதிரடி ஏன்?
Mar 15, 2026, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இனி உங்கள் ஃபோனில் Sanchar Saathi APP கட்டாயம் – மத்திய அரசு அதிரடி ஏன்?

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதியதாகத் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல்களிலும் அரசின் பாதுகாப்பு செயலியான (Sanchar Saathi) சஞ்சார் சாதி செயலியை Pre-Install செய்திருக்க வேண்டியது கட்டாயம் என வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியது ஏன்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் பாதுகாப்பில் முழுமையான அக்கறை கொண்டுள்ள மத்திய தொலைத் தொடர்புத் துறை, 2023ம் ஆண்டு மே மாதம் Sanchar Saathi இணையதளத்தைத் தொடங்கியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 17ம் தேதி, சஞ்சார் சாதி (Sanchar Saathi) மொபைல் செயலி அறிமுகப்படுத்தப் பட்டது.

இது தொலைத்தொடர்பு பாதுகாப்பு சேவைகளை நேரடியாகப் பெற அனுமதி அளிக்கிறது. DoT ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் கிடைக்கும் இந்தச் செயலி, வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், சைபர் மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் உறுதியளிக்கிறது. KYM அம்சத்துடன் சஞ்சார் சாதி செயலி கொண்டுவரப் பட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி உட்பட 21 மாநில மொழிகளில் செயல்படும் இந்தச் செயலிக்கு , கூகிள் பிளேஸ்டோரிலிருந்து 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களும், ஆப்பிள் ஸ்டோரிலிருந்து 9.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களும் உள்ளன. மக்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்ட இந்த Sanchar Saathi இணையத் தளத்தை 16.7 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர்.

26 லட்சத்துக்கும் அதிகமான திருடப்பட்ட அல்லது தொலைந்து போன செல்போன்களை மீட்கவும், புகார்களின் அடிப்படையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகளைத் துண்டிக்கவும், இந்தச் சஞ்சார் சாதி செயலி பயன்பட்டுள்ளது. இதில் உள்ள Chakshu என்ற அம்சம் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் தீங்கிழைக்கும் இணைப்புகள் அல்லது தீங்கு விளைவிக்கும் தகவல்தொடர்புகளைத் தடுக்க பயன்படுகிறது.

ஃபிஷிங் இணைப்புகள் மற்றும் நிதி மோசடிகள் முதல் சரிபார்க்கப்படாத APK கோப்புகள், குளோனிங் முயற்சிகள் அல்லது SMS, RCS, iMessage, WhatsApp, Telegram மற்றும் பிற தளங்கள் மூலம் பெறப்பட்ட ஸ்பேம் செய்திகள் வரை அனைத்தையும் இது தடுக்கிறது. Chakshu அம்சத்தின் மூலம் சைபர் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சுமார் 42.14 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் செயலிழக்கச் செய்யப் பட்டுள்ளன.

நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்குவதோடு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், யுபிஐ சேவை அளிப்போர் மற்றும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தச் செயலி பயன்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பெயரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களையும் பார்க்கவும், பயன்படுத்தாத செல்போன் எண்களைக் குறித்து புகாரளிக்கவும் இந்தச் செயலி உதவுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து புதிய செல்போன்களிலும் அடுத்த 90 நாட்களுக்குள் Sanchar Saathi செயலியை Pre-Install செய்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீக்க முடியாத செயலியைக் கட்டாயமாக்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் மாநிலங்களைக் கண்காணிக்க இந்தச் செயலி கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.

இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தச் செயலி முற்றிலும் மக்களின் விருப்பத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், உளவு பார்ப்பதையோ அல்லது அழைப்பு கண்காணிப்பையோ இந்தச் செயலி செய்யாது என்றும் கூறியுள்ளார்.

உலகில் எங்கும் இது போன்ற அரசின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்று கூறியுள்ள ஆப்பிள் நிறுவனம், இதுகுறித்து அரசுக்குத் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்சங் உள்ளிட்ட பிற செல்போன் நிறுவனங்கள் அரசின் உத்தரவு குறித்து பரிசீலனை செய்து வருவதாகவதாகக் கூறப்பட்டுள்ளது.

Tags: Sanchar Saathi)செயலிSanchar Saathi APP is now mandatory on your phone - Why is the central government taking action?Sanchar Saathi APP கட்டாயம்மத்திய அரசு அதிரடி
ShareTweetSendShare
Previous Post

UAE-யின் தடுப்பு காவலில் சிக்கியுள்ள முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி : நீதிமன்ற வழக்கால் வெளிவந்த ‘பிளாக் பாக்ஸ்’ ரகசியங்கள்…!

Next Post

காசி தமிழ் சங்கமம் 4.0 : தமிழ் கற்க தமிழகம் வரும் வாரணாசி மாணவர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies