விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சாலையம்பாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















