பழிவாங்கத் துடிக்கும் JeM : 5000 பெண் ஜிகாதிகள் - அடங்காத மசூத் அசார்!
Mar 15, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பழிவாங்கத் துடிக்கும் JeM : 5000 பெண் ஜிகாதிகள் – அடங்காத மசூத் அசார்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்துவதற்காக, 5000க்கும் மேற்பட்ட பெண் ஜிகாதிகளை உருவாக்கியுள்ளதாகப் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் அழிக்கப்பட்டது. இந்தியாவின் ராணுவத் தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பெரிய அக்கா, மைத்துனர் யூசுப் அசார், மைத்துனரின் மனைவி, அவர்களின் 5 குழந்தைகள் மற்றும் மசூத் அசாரின் பாதுகாவலர்கள் 4 பேர் உட்பட 100க்கும் அதிகமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் அதிரடித் தாக்குதலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த ஜெய்ஷ்-இ-முகம்மது, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை மீண்டும் நடத்த புதிய யுக்திகளை செயல்படுத்தி வருகிறது. இதுவரை பெண்களை நேரடியாகப் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாத ஜெய்ஷ்-இ-முகம்மது முதன்முறையாகப் பெண் ஜிகாதிகளை உருவாக்க ஜமாத்-உல்-மோமினாத் என்ற பெயரில் ஒரு மகளிர் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பகவல்பூரில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பிரிவில் சேரும் பெண்களைத் தற்கொலைப் படை ஜிகாதிகளாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அஸார் மற்றும் அவரது சகோதரர் தல்ஹா அல்-சைஃப் ஆகியோரின் ஒப்புதலுடன், மசூத் அஸாரின் சகோதரி சதியா அஸார் இந்தப் புதிய பெண்கள் ஜிகாதி பிரிவுக்குத் தலைமை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மசூத் அசாரின் மற்றொரு சகோதரியான சஃபியா அசார், புல்வாமா தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட உமர் ஃபரூக்கின் மனைவி அஃப்ரீரா ஃபரூக் ஆகியோரும் இந்தப் பிரிவில் முக்கியப் பொறுப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘துஃபத் அல்-முமினத்’ என்ற பெயரில் நடத்தப்படும் ‘ஆன்லைன்’ ஜிகாதி பயிற்சி வகுப்பில் சேரும் ஒவ்வொரு பெண்ணிடமும் 500 பாகிஸ்தான் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்படுவதாகவும் தினமும் 40 நிமிடங்கள் நடைபெறும் இந்த வகுப்புகள் மூலம், மத ரீதியாகவும், ஜிகாத் சார்ந்தும் போதனைகள் அளிக்கப்பட்டு பெண்களை மூளைச்சலவை செய்து பயங்கவாதிகளாக மாற்றுவதாவும் கூறப்படுகிறது.

இந்தப் பெண் ஜிகாதிகள் அமைப்பின் இந்திய பிரிவின் தலைவராக டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய டாக்டர் ஷாகின் சயீத் செயல்பட்டு வந்தது புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு டாக்டர் ஷாகின் சயீத் மூலமே நிதி வழங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மசூத் அசார் தனது எக்ஸ் பக்கத்தில், வெற்றிகரமாகப் புதிய பெண்கள் தற்கொலை படைப்பிரிவில் 5000க்கும் மேற்பட்ட பெண்களைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெண் ஜிகாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மாவட்டந்தோறும் தனி அலுவலகங்களைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முழுமையான செயல்பாட்டு மையங்களாகச் செயல்படும் இந்தப் புதிய அலுவலகங்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலிருந்து பெண் ஜிகாதிகளுக்குப் பயிற்சி அளிப்பது வரை அனைத்தையும் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. ஜமாத்துடன் இணைந்திருப்பது, “வாழ்க்கையில் நோக்கத்தை” அளித்துள்ளதாகக் கூறியுள்ள பெண் ஜிகாதிகளின் கடிதங்களையும் மசூத் அசாரின் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானில் உள்ள ‘ஜிகாதி நெட்வொர்க்குக்கு அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழகம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள மசூத் அசார், ஏற்கெனவே ‘ஜமாத் உல்-முமினத் என்ற மகளிர் பிரிவின் தேவை, செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி வெளிப்படையாக விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இஸ்லாத்துக்காக உயிர்விடும் தியாகத்துக்காக ஜன்னத் எனப்படும் இறுதி சொர்க்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மசூத் அசார் குறிப்பிருந்தார் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெண் ஜிகாதி அமைப்புக்கான ஆள்சேர்ப்பு பணிகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் வழியாக ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளிலும் பெண் ஜிகாதிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: NEWS TODAYtoday newspakistan newsJeM seeks revenge: 5000 female jihadis - Masood Azhar is unstoppable
ShareTweetSendShare
Previous Post

எப்போதும் நண்பேன்டா…! – கோவா விடுதலையில் ரஷ்யாவின் பங்கு!

Next Post

கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு – பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies