2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், 2024 – 2025ம் நிதியாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், மின்சார வாகன சந்தை ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், 400-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
















