சவால்களுக்கு மத்தியில் இந்தியா-ரஷ்யா உறவு துருவ நட்சத்திரம் போல உறுதியாக உள்ளது - பிரதமர் மோடி
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சவால்களுக்கு மத்தியில் இந்தியா-ரஷ்யா உறவு துருவ நட்சத்திரம் போல உறுதியாக உள்ளது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 6, 2025, 06:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு, துருவ நட்சத்திரம்போல உறுதியாக நீடிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா-ரஷ்யாவின் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்க புதின் டெல்லிக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் புதின் முன்னிலையில் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன் பிறகு, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா-ரஷ்யா இடையேயான நீண்டகால நட்பு குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு, துருவ நட்சத்திரம்போல உறுதியாக நீடிப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த உறவு பரஸ்பர மரியாதை மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் வேரூன்றி உள்ளது என்றும் கூறினார்.

மேலும், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் போன்ற பாரம்பரிய பிரிவுகளைத் தவிர, அணுசக்தி, முக்கிய தாதுக்கள், இந்திய மாலுமிகளுக்கு பயிற்சி அளித்தல் போன்ற புதிய துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், முதலில் இந்தியா அளித்த சிறப்பான வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார். பிறகு, வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு தடையின்றி எரிபொருள் விநியோகத்தை தொடர ரஷ்யா தயாராக இருப்பதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவும், ரஷ்யாவும் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் திட்டத்தில் பணியாற்றி வருவதாகக் கூறிய புதின், ரஷ்யாவிலிருந்து இந்திய பெருங்கடலுக்கு புதிய சர்வதேச போக்குவரத்து வழிகளை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: putin visit indiaputin india visitputin in india visit liveputin india visit hindiputin india visit datesputin in india visitputin india visit updateputin on india visitputin india visit agendaputin india visit livechina on putin india visitputin india visit datemodi putin discussionputin india visit newsputin india visit 2025putin india visit dec 4putin visit in india
ShareTweetSendShare
Previous Post

ஐடி மற்றும் மருத்துவத்துறையில் உலகின் முன்னணி இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர் – புதின் பாராட்டு!

Next Post

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிறப்பு விருந்து – சசிதரூர் பங்கேற்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies