மகாகவி பாரதியாரின் ஆசைப்படி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவரின் சிலையை ஜதிப்பல்லக்கில் வைத்துக் கொண்டு செல்லப்பட்டது.
1919ம் ஆண்டு எட்டயபுரம் மன்னருக்குப் பாரதியார் எழுதிய கடிதத்தில், தங்களை சந்திக்க வரும் தன்னை ஜதி பல்லக்கில் வைத்துப் பொன்னாடை அணிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் ஆசை நிறைவேறுவதற்குள் பாரதியார் உயிரிழந்தார். இந்த நிலையில் எட்டயபுரம் சமஸ்தானம் அரண்மனை வளாகத்தில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடைபெற்றது.
அப்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்திலிருந்து, அரண்மனை வரை பாரதியாரின் சிலையை ஜதிப்பல்லக்கில் வைத்து மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டது.
இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நடராஜன், ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















