ஜெர்மனியில் இளைஞர்களுக்குக் கட்டாய ராணுவ சேவை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே ரஷ்யாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ராணுவ பலத்தை பெருக்க அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன.
அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களை ராணுவ சேவையில் இணைக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தச் சேவை ஆண்களுக்குக் கட்டாயமாகவும், பெண்களுக்குத் தன்னார்வ அடிப்படையிலும் இருக்கும்.
போர் ஏற்படும் காலங்களில் இவர்கள் ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
















