தங்களது கோரிக்கைகளை அரசாணையாக வெளியிடும் வரை போராட்டம் ஓயாது என ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, கடந்த ஜனவரி மாதம் தங்களது 11 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டதாகவும் ஆனால் இதுவரை அதற்கான அரசாணையை வெளியிடவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்ததால் ஒரு பயனும் இல்லை எனக் கூறிய அவர், அரசாணையை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறினார்.
















