பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
அகவிலைபடியுடன் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு, அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
















