தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமகவின்ர டிச.14 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்.
போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20&ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
















