சிவகங்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க அறநிலையத்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை காமராஜர் காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர்.
அண்மையில், அந்த இடமானது கெளரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள வீடுகளை இடிக்கப் போவதாக அறநிலையத்துறை சார்பில் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், அறநிலையத்துறையின் செயலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
















