செம்பரம்பாக்கம் ஏரியில் முழுகொள்ளளவான 24 அடி வரை நீரை தேக்கி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கனமழை காரணமாகச் செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 23 புள்ளி 67 அடியாக உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஏரியில் 23 புள்ளி 45 அடி நீரை தேக்கி வைத்ததே அதிகபட்சமாக இருந்தது.
















