புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் - வரவேற்கும் தொழில் நிறுவனங்கள்!
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் – வரவேற்கும் தொழில் நிறுவனங்கள்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழில்நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் புதிய சட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் பழைய தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக புதியதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது. ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி ஆகிய சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் புதிய சட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. தொழிலாளர்களின் நலனை மையப்படுத்தி கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்களுக்குத் தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களின் நோக்கங்களை முழுமையாக அறியாமல் வழக்கம் போல சில எதிர்க்கட்சிகள் இச்சட்டங்களுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய சட்டம் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்குமே தவிர, எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தொழிலாளர்களின் சட்ட வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி நியமன கடிதங்களை வழங்க வேண்டும், நிரந்தர தொழிலாளர்களை போல ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் விடுமுறை, நாற்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை, வருங்கால வைப்புநிதி, காப்பீடு என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவிற்கு புதிய சட்டங்களில் சலுகைகள் நிரம்பியுள்ளன.

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்குக் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோரின் கருத்துகளை புறந்தள்ளிவிட்டு தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இந்தச் சட்டங்கள் ஒவ்வொன்றும் கொண்டாடி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Tags: புதிய தொழிலாளர் சட்டங்கள்New labor laws: Businesses welcome workers with boons
ShareTweetSendShare
Previous Post

‘மெஸ்ஸி’ நிகழ்ச்சியில் வெடித்த வன்முறை : ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

Next Post

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 2 மாணவர்கள் பலி!

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies